ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பொதுக்குழுவிற்கு கிளம்பிய அதிமுக நிர்வாகிகள்!
இன்று காலை 7 மணிக்கெல்லாம் மெரினா பகுதியிலுள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் பகுதிக்கு கிளம்பி செ
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு இன்று காலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை தேர்ந்தெடுக்க கட்சியின் முன்னணி தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். இதையொட்டி அதிமுக. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கெல்லாம் மெரினா பகுதியிலுள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு வானகரம் கிளம்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications