ஆகாயத்தில் பறக்கும் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட நல்ல வாய்ப்பு... மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி: ஆகாயத்தில் பறந்து வாக்காளர்களை சந்திக்க வரும் முதல்வர் ஜெயலலிதாவை லோக்சபா தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் என்.பி. ஜெகனை ஆதரித்து நேற்று இரவு தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். இதில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
முன்பு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல 16 மணி நேரமாகும். தற்போது கிழக்கு கடற்கரை சாலை வழியாக 8 மணி நேரத்தில் செல்ல முடிகிறது.

இதற்கு காரணம், மத்திய ஆட்சியில் திமுக அங்கம் வகித்ததுதான். தூத்துக்குடியில் ரூ.17 கோடியில் புதிய அரசு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 4வது பைப் லைன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட இடிந்தகரையில் ரூ.7.50 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. தலா ரூ.1.50 லட்சம் மதிப்பில் 1196 சுனாமி குடியிருப்பு வீடுகள் ரூ.48 கோடியில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு தூத்துக்குடி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டது. இங்கு நிவாரண பணியில் ஈடுபட என்னை கருணாநிதி அனுப்பி வைத்தார். நான் தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டரில் வரவில்லை. காரில்தான் வந்தேன். காரை ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டு, நடந்து சென்று பணிகளை பார்வையிட்டேன்.
நகரின் மையப்பகுதியில் வெள்ளம் வழிந்தோடுவதற்கு வசதியாக பக்கிள் ஓடையில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, இருபுறமும் தார்சாலை அமைத்து வெள்ளம் வழிந்தோட வகை செய்யப்பட்டது. இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 12-8-2008ல் பணி துவங்கப்பட்டு 3 கட்டமாக பணிகளை நிறைவு செய்துள்ளோம்.
இந்த பணியை அதிமுக அரசு கிடப்பில் போட்டது. மக்கள் பணி செய்ய அவர்களுக்கு மனம் வரவில்லை. சேது சமுத்திர திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டவர் ஜெயலலிதா. அந்த திட்டத்திற்கு ராமர் சேது என பெயர் மாற்றம் செய்தாவது நிறைவேற்ற வலியுறுத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி.
தமிழகத்தில் இரண்டாவது தொழில் மையமாக தூத்துக்குடி விளங்குகிறது என்றும், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் தூத்துக்குடி துறைமுகம் ஆசிய கண்டத்திலேயே 2வது பெரிய துறைமுகமாக உருவாகி இருக்கும் என்று விக்கி பீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முடக்கி தூத்துக்குடி வளர்ச்சியை கெடுத்தவர் ஜெயலலிதா.
மத்திய அரசில் திமுக அங்கம் வகித்ததால், தமிழகத்தில் ரூ.928 கோடியில் மீட்டர்கேஜ் ரயில் பாதைகள், அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளது. ரூ.1828 கோடியில் 90 மேம்பாலங்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. சென்வாட் வரி முழுமையாக நீக்கம் செய்யப்பட்டது. 50 காசில் செல்போனில் நாடு முழுக்க பேசும் வசதி கொண்டு வரப்பட்டது. விவசாயிகளின் ரூ.72 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படி பல நல்ல திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது இவ்வாறு மு.க.ஸ்டாலின் என்றார்.
இதேபோல காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் திருப்போரூரில் பேசிய போது, ஒரு சில தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே உங்களிடம் வருவார்கள். நாங்கள் எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்போம். ஜெயலலிதா ஆகாயத்தில் தனி விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ வருவார். அவர் மேலே பறக்கும்போது, கீழே பூமியில் போலீசார் பாதுகாப்பு கொடுப்பார்கள்.
திமுக ஆட்சில் மத்திய கைலாஷ் முதல் மாமல்லபுரம் வரை தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலையாக ஆறு வழி சாலை அமைக்கப்பட்டது. ஸி1300 கோடி செலவில் சிறுசேரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு, 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அந்த பூங்காவில் வேலை செய்த சாப்ட்வேர் ஊழியர் உமாமகேஸ்வரி, பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டார். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க இந்த ஆட்சியால் முடியவில்லை. இந்த ஆட்சி தேவையா. ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட ஒரு நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது என்றார் மு.க.ஸ்டாலின்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications