ஆட்சி பற்றி விமர்சனம் செய்த வாக்காளர் மீது அதிமுகவினர் கொலைவெறி தாக்குதல்!
அரியலூர்: அதிமுகவை விமர்சனம் செய்து பேசியவர் அக்கட்சியினரால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் குண்டுகல்யாணம் மேற்கொண்ட பிரசார கூட்டத்தில் நடந்தது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு நடிகர் குண்டு கல்யாணம், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது கூட்டத்திற்கு வந்த பொதுமக்களில் ஒருவர், அதிமுக அரசு பற்றி, விமர்சனம் செய்து கருத்து கூறினார். ஆனால், இதை பொறுத்துக்கொள்ள முடியாத அதிமுக தொண்டர்கள், பலரும், அந்த நபரை சூழ்ந்து கொண்டு, அடித்து உதைத்தனர். வலி தாங்க முடியாமல், அலறினார்.

அப்போதும், குண்டு கல்யாணம், இந்த வன்முறையை தடுத்து நிறுத்தாமல், சொன்னீங்களே, செஞ்சீங்களா என்ற திமுகவின் விளம்பரத்திற்கு விளக்கம் கொடுத்துதான் பேசிக்கொண்டிருந்தார்.
இதனிடையே, அந்த ஊரை சேர்ந்த வேறு சிலர், அந்த நபரை பாதுகாப்பாக இழுத்து சென்றனர். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications