ஆட்சி எங்களால் கலையாது... நாளைக்கு நல்ல செய்தி வரும் - ஓபிஎஸ்
நாளை அல்லது நாளை மறுநாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: அணிகளை இணைக்க எந்த நிபந்தனையும் நாங்கள் வைக்கவில்லை என்றும் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி இரு தினங்களில் வரும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
பிளவுபட்டுள்ள அதிமுக அணிகளை இணைக்க இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இணைப்பு பற்றி நேற்றே அறிவிப்பு வெளியாகும் என்று தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால் இழுபறியால் இணைப்பு தள்ளிப்போனது.

இந்த சூழ்நிலையில் இன்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது அணியினருடன் ஆலோசனை நடத்தினார். காலையில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து ஓரிரு தினங்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். அதிமுக இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மாலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், நாளை அல்லது நாளை மறுநாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும் என்றார்.
எங்கள் பேச்சுவார்த்தையில் எந்த நிபந்தனையும் இல்லை. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு நாங்கள் தரும் அறிக்கையில் எல்லா விவரமும் தருவோம் என்றார்.
ஆட்சி எங்களால் கலையாது என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுவதாக தெரிவித்தார்.
-
எங்களுக்கா ஓட்டு இல்லை? நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 9 இடங்களில் டெபாசிட் இழந்ததே! கிருஷ்ணசாமி பதிலடி -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications