ஜல்லிக்கட்டு நாயகன்.. பன்னீர்செல்வத்திற்கு சட்டசபையில் புகழாரம்

நேற்றைய கேள்வி நேரத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ தென்னரசு, ஜல்லிக்கட்டு நாயகன் என்ற ஒரு புகழ்ச்சியை பன்னீர்செல்வத்திற்கு சூட்டினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்தை, ஜல்லிக்கட்டு நாயகன் என்று அதிமுக எம்.எல்.ஏ தென்னரசு புகழ்ந்துள்ளார்.

அதிமுகவின் அதிகார தலைமையாக இருப்பது சசிகலா. எனவே, சட்டசபையில் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவை புகழ்வது வாடிக்கை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் அதன் பிறகு, சசிகலாவையும் அதிமுக எம்.எல்.ஏக்கள் புகழ்வது வாடிக்கையாகியுள்ளது.

AIADMK MLA praised O.Pannerselvam, as Jallikattu Nayagan

இதனால்தான், சட்டசபையிலும், சின்னம்மா, குட்டியம்மா என்று சசிகலாவை புகழ்வதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ஆனால் சிலர் மட்டுமே முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பாராட்டி பேசுவது உண்டு.

நேற்றைய கேள்வி நேரத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ தென்னரசு இப்படி ஒரு புகழ்ச்சியை பன்னீர்செல்வத்திற்கு சூட்டினார். ஜெயலலிதா, சசிகலா ஆகியோரைதான் இவரும் முதலில் புகழ்ந்தார். இதன்பிறகு, "ஜல்லிக்கட்டு நாயகன் முதல்வரை வணங்கி, பேச்சை துவக்குகிறேன்" என்று தெரிவித்தார். இதைக் கேட்ட பன்னீர்செல்வம், தென்னரசுவை சிரித்தபடி அவரை திரும்பி பார்த்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்து சட்டம் இயற்றினார். டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து அவசர சட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார். இதையடுத்துதான், பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்ந்துள்ளார் தென்னரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+