அதிமுகவில் அடுத்த அதிரடி.. செப். 12ம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது!
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செப்டம்பர் 12ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு செப்டம்பர் 12ல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் 12ஆம் தேதி காலை 10.35 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
தற்போது, அதிமுக பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அதிமுக கட்சியின் தற்போதைய தலைமைக்கு கடிதம் எழுதினால் பொதுக்குழுவை கூட்டலாம் என்ற சட்டவிதி உள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்குவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, அதை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தாலே கட்சி மற்றும் இரட்டை இலையை முதல்வர் எடப்பாடி அணியினர் எளிதில் கைப்பற்றி விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications