டிடிவி தினகரனுக்கு எதிராக பகிரங்கமாக முஷ்டி முறுக்கிய எடப்பாடி அணி! அதிமுகவில் இப்போ 3 அணி!!
சென்னை: டிடிவி தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி முஷ்டி முறுக்கியுள்ளது.
சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டே நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன் வைத்து பன்னீர்செல்வம் அணி முஷ்டியை தூக்கியபடி அலைகிறது.
மற்றொரு பக்கம், நாம் உண்டு நமது வேலை உண்டு, யார் வம்புக்கும் போறதில்லை என்பதை போல முகத்தை வைத்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அவரது அணியினர் உள்ளனர்.

ஜாமீன்
இவ்விரு கோஷ்டிகளுமே, தாராளமாக தங்கள் பணிகளை பார்த்தபடிதான் உள்ளனர். ஆனால் இதெல்லாம் டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வரும்வரை இருந்த நிலைதான். அவர் ஜாமீனில் வெளியே வந்ததும், இரு அணிகளுக்குமே கிலி பிடித்துள்ளது.

கட்சிப் பணி
தினகரனும், வெளியே வந்ததும் முதல் வேளையாக நான் கட்சிப் பணியாற்றப்போகிறேன். இதுவரை இரு அணிகளும் இணையாத நிலையில் நான் கட்சியை விட்டு விகியிருப்பது வீண் என கூறி, திகில் கிளப்பிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த, அமைச்சர் செங்கோட்டையன், தினகரன் கட்சியில் இருக்க வேண்டுமா என்பதையே எடப்பாடிதான் சொல்ல வேண்டும் என கூறினார்.

அவசர ஆலோசனை
இந்த நிலையில், தினகரன் இன்று பெங்களூருக்கு சசிகலாவை சிறையில் சென்று சந்திக்க சென்ற நிலையில், அவசரமாக அமைச்சர் ஜெயக்குமார் அறையில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

மூன்று அணி
இதன்பிறகு நிருபர்களுக்கு அமைச்சர்கள் கூட்டாக காட்சியளித்தனர். அவர்கள் சார்பில் ஜெயக்குமார் பேட்டியளித்தார். டிடிவி தினகரன், கட்சியை விட்டே விலகி இருக்க வேண்டும் என்று, ஜெயக்குமார் அறிவித்தார். இதன்மூலம், டிடிவி தினகரன் vs பன்னீர் என்ற நிலை மாறி டிடிவி தினகரன் vs எடப்பாடி என மாறியுள்ளது.
இதில் ஜெயக்குமார் முக்கிய பங்காற்றியுள்ளார். இதனால் அதிமுக அதிகாரப்பூர்வமாகவே 3 அணிகளாக பிரிந்துள்ளது.












Click it and Unblock the Notifications