ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் இன்று சென்னை வருகை!
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் இன்று சென்னை வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பாட்டு வரும் நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் குழு சென்னைக்குப் புறப்பட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு அதுகுறித்த தீவிர சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு சென்னைக்குப் புறப்பட்டுள்ளது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதே போல மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உள்ளிட்டோரும் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற தாங்கள் இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications