ஏற்காடு இடைத் தேர்தல் - அதிமுகவை ஆதரிப்பதாக டாக்டர் சேதுராமன் அறிவிப்பு
மதுரை: ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக டாக்டர் சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் தெரிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியில்தான் இந்தக் கட்சி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே திமுக தனது வேட்பாளரை அறிவித்து பிற கட்சிகளிடம் ஆதரவும் கோர ஆரம்பித்து விட்டது. ஆனால் அதிமுக வேட்பாளர் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் தலைவர் டாக்டர் சேதுராமன், தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், தாங்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்று தொடர்ந்து வரலாற்று சாதனைகளை நிகழ்த்தி வருகின்றீர்கள். உங்களுக்கு எங்களது அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பாக பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
டிசம்பர் 4 அன்று தமிழகத்தில் நடைபெற உள்ள ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறது.
அதிமுக வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு எங்களது அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications