ஆல் இந்திய ரேடியோவில் பாலியல் தொல்லை.. புகார் கூறிய ஆர்.ஜே. தம்பதி பணி நீக்கம்
சென்னை: சென்னையில் உள்ள ஆல் இந்திய ரேடியோவின் ரெயின்போ எப்.எம். நிலையத்தில் பாலியல் தொல்லைக்குள்ளான பெண் ரேடியோ ஜாக்கியையும், அவரது கணவரையும் வேலையை விட்டு நீக்கியுள்ள செயல் அதிர வைத்துள்ளது.
புகார் கூறியவர்களையே வேலையை விட்டு நீக்கியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆனால் அவர்கள் சரியான முகவரியை வானொலி நிலையத்திற்குத் தராத காரணத்தால்தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக புரோகிராம் எக்சிகியூட்டிவ் ஆர். முரளி விளக்கியுள்ளார். இவர் மீதுதான் பாலியல் தொல்லை புகார் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரலில் நடந்த சம்பவம்
இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்துள்ளது. அதன் பின்னர் வானொலி நிலையத்தில் உள்ள பாலியல் தொல்லைக்கு எதிரான கமிட்டி விசாரணை நடத்தியது.

உருப்படியில்லாத விசாரணை
விசாரணையில் எந்த உருப்படியான முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து அகில இந்திய வானொலியின் பிராந்திய இயக்குநர் வரை புகார் கொடுத்தார் அப்பெண். ஆனால் பலன் இல்லை.

நடந்தது என்ன
இதுகுறித்து நிர்மலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அன்தப் பெண் கூறுகையில், ‘நான் 2004ம் ஆண்டு ரெயின்போ வானொலியில் சேர்ந்தேன். திருமணத்திற்குப் பின்னர் தர்மபுரியில் குடியமர்ந்த, ரெயின்போ வானொலிக்காக நடந்த ஆடிஷனில் கலந்து கொண்டேன். பின்னர் ரேடியோ ஜாக்கியாக தேர்வானேன்.

சேர்ந்தது முதலே தொல்லைதான்
பணியில் சேர்ந்தது முதலே முரளி எனக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். என்னைப் பார்த்து அடிக்கடி தேவையில்லாத கமெண்ட் அடிப்பார்.

இரவில் போன் பண்ணச் சொல்வார்
இரவில் தனக்கு போன் செய்யச் சொல்வார். அலுவலகத்தில் என்னைப் பார்க்கும்போதெல்லாம் தேவையில்லாத வார்த்தைகளைப் பிரயோகிப்பார். அவருடன் நான் பேசுவதையே நிறுத்தி விட்டேன். எனது கணவரும், எனது அலுவலகத்தில் கேஷுவல் அனவுன்சாராக இருந்தார். அவரிடம் இதுகுறித்து பேசினேன்.

மிரட்ட ஆரம்பித்தார்
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், எனக்கு உடன்படாவிட்டால், என்னை வேலையை விட்டு நீக்கப் போவதாக மிரட்ட ஆரம்பித்தார் முரளி. அதன் பிறகே நாங்கள் புகார் கொடுக்க முடிவு செய்தோம். முதலில் கூடுதல் இயக்குநரிடம் புகார் கொடுத்தோம். பின்னர் பாலியல் புகார்களுக்கான கமிட்டியிடம் புகார் கொடுத்தோம். விசாரணையும் நடந்தது. ஆனால் எங்களை தற்போது வேலையை விட்டு நீக்கியுள்ளனர்' என்றார்.

இன்னொரு பெண்ணும் நீக்கம்
இதற்கிடையே, அனவுன்சராக இருக்கும் இன்னொரு பெண்ணையும் வேலையை விட்டு நீக்கியுள்ளதாம் அகில இந்திய ரேடியோ நிர்வாகம்.
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications