"தமிழிசை"யின் வேண்டுகோளை ஏற்று வானொலியில் "இந்தி" ஓசை நிறுத்தம்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் வேண்டுகோளை ஏற்று வானொலியில் இந்தி ஒலிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் அகில இந்திய வானொலியில் தினமும் நான்கு மணி நேரம் இந்தியில் விளம்பர நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு தமிழக கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தன. மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்தி திணிப்பு செயல் இது என கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது வானொலியில் இந்தி விளம்பர நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக கட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-

வேண்டுகோள்...
தமிழக பா.ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது அவர் மத்திய அமைச்சரிடம் வானொலியில் இந்தியில், விளம்பர நிகழ்ச்சிகளை 4 மணிநேரம் ஒலிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உத்தரவு...
உடனே மத்திய அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, அந்த இந்தி விளம்பர ஒலிப்பரப்புகளை நிறுத்தும்படி உத்தரவிட்டார். தமிழக மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அவர் தெரிவித்தார்.

பாஜகவின் எண்ணம்...
உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சருக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி கூறிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ‘எந்த மொழியாக இருந்தாலும், அதை படிப்பதையும், ஏற்பதையும் மக்கள் தாமாகவே விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றே பா.ஜனதா எண்ணுகிறது.

நல்ல உதாரணம்...
மாறாக எந்த நிலையிலும் மொழியை திணிப்பதை பா.ஜனதா கட்சி மேற்கொள்ளாது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்' என்று அவரிடம் தெரிவித்தார்' என இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications