ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. அதிகாரிகள் விளக்கம்!
ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.
சென்னை: ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். மேலும் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.
இதுவரை அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற 15 லட்சம் பேர் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் இதில் 90 சதவீத மக்களின் கோரிக்கையை அந்நிறுவனம் இன்னும் ஏற்கவில்லை.
தற்போது இந்த நிறுவனம் மூடப்படப்போகிறது என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் இதில் உண்மையான நிலவரம் என்ன என்று தற்போதுதான் தகவல் கிடைத்துள்ளது.

எப்படி வழங்கியது
கடந்த டிசம்பர் மாதமே இந்த பிரச்சனை தொடங்கி இருக்கிறது. ஏர்செல் நிறுவனத்திற்கும் மூன்று டவர் கம்பெனிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதை வைத்துதான் இவ்வளவு வருடம் இந்தியா முழுக்க ஏர்செல், சிக்னல் வழங்கிக் கொண்டு இருந்தது.

காரணம் என்ன
இந்த நிலையில் அதில் ஒரு நிறுவனத்துடன் தற்போது ஏர்செல்லுக்கு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. என்ன மாதிரியான பிரச்சனை என்று தெரியவில்லை. அந்த நிறுவனம்தான் இந்தியாவில் நிறைய இடங்களில் ஏர்டெல்லுக்கு சிக்னல் வழங்கி வருகிறது. இதனால்தான் தற்போது சிக்னல் எடுப்பதில்லை.

சீக்கிரம் வந்துவிடும்
இதுகுறித்து இப்போதுதான் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும். இதனால் கம்பெனி மூடப்பட போவதில்லை என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மீண்டும் சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இல்லை
அதேபோல் நிறுவன ஊழியர்களுக்கும் கம்பெனி மூடுதல் குறித்த தகவல் செல்லவில்லை. இந்தியா முழுக்க ஏர்செல்லில் 7000 பேர் வரை வேலை செய்கிறார்கள். இவர்களில் யாருக்கும் இதுகுறித்து தகவல் செல்லவில்லை. எனவே நிறுவனம் மூடப்படுவது பொய் என்பது உறுதியாகி உள்ளது.

போட்டி
இது முழுக்க முழுக்க புரளி என்று கூறப்பட்டு உள்ளது. இதை பின்பிருந்து போட்டியாளர்கள் இயக்குவதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமாக நிறுவனத்தை காலி செய்ய போட்டியாளர்கள் இப்படி செய்கிறார்கள் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications