ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. அதிகாரிகள் விளக்கம்!
ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.
சென்னை: ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். மேலும் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.
இதுவரை அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற 15 லட்சம் பேர் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் இதில் 90 சதவீத மக்களின் கோரிக்கையை அந்நிறுவனம் இன்னும் ஏற்கவில்லை.
தற்போது இந்த நிறுவனம் மூடப்படப்போகிறது என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் இதில் உண்மையான நிலவரம் என்ன என்று தற்போதுதான் தகவல் கிடைத்துள்ளது.

எப்படி வழங்கியது
கடந்த டிசம்பர் மாதமே இந்த பிரச்சனை தொடங்கி இருக்கிறது. ஏர்செல் நிறுவனத்திற்கும் மூன்று டவர் கம்பெனிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதை வைத்துதான் இவ்வளவு வருடம் இந்தியா முழுக்க ஏர்செல், சிக்னல் வழங்கிக் கொண்டு இருந்தது.

காரணம் என்ன
இந்த நிலையில் அதில் ஒரு நிறுவனத்துடன் தற்போது ஏர்செல்லுக்கு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. என்ன மாதிரியான பிரச்சனை என்று தெரியவில்லை. அந்த நிறுவனம்தான் இந்தியாவில் நிறைய இடங்களில் ஏர்டெல்லுக்கு சிக்னல் வழங்கி வருகிறது. இதனால்தான் தற்போது சிக்னல் எடுப்பதில்லை.

சீக்கிரம் வந்துவிடும்
இதுகுறித்து இப்போதுதான் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும். இதனால் கம்பெனி மூடப்பட போவதில்லை என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மீண்டும் சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இல்லை
அதேபோல் நிறுவன ஊழியர்களுக்கும் கம்பெனி மூடுதல் குறித்த தகவல் செல்லவில்லை. இந்தியா முழுக்க ஏர்செல்லில் 7000 பேர் வரை வேலை செய்கிறார்கள். இவர்களில் யாருக்கும் இதுகுறித்து தகவல் செல்லவில்லை. எனவே நிறுவனம் மூடப்படுவது பொய் என்பது உறுதியாகி உள்ளது.

போட்டி
இது முழுக்க முழுக்க புரளி என்று கூறப்பட்டு உள்ளது. இதை பின்பிருந்து போட்டியாளர்கள் இயக்குவதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமாக நிறுவனத்தை காலி செய்ய போட்டியாளர்கள் இப்படி செய்கிறார்கள் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications