54வது வாட்டி உடைஞ்சு போன சென்னை விமான நிலைய மேற்கூரை... இந்த முறை 2 ஊழியர்கள் காயம்!
ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் 54வது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு விமான நிலைய ஊழியர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுவரை 13 முறை மேற்கூரைகள் இடிந்து விழுந்து உள்ளன. 18 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 15 முறை தடுப்பு கண்ணாடிகளும் உடைந்து விழுந்து உள்ளன. 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்தும், ஒரு முறை விளக்கு கண்ணாடி உடைந்து விழுந்தும் உள்ளன. இதுவரை 52 முறை நடைபெற்று உள்ள இந்த உடைப்பு சம்பவங்களில் 8 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

நேற்று 53:
இந்த நிலையில் 53 ஆவது முறையாக மீனம்பாக்கம் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி அருகே 13 ஆவது நுழைவு வாயிலில் உள்ள 7 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட தானியங்கி கண்ணாடி கதவு ஒன்று நேற்று மதியம் திடீரென உடைந்து விழுந்து நொறுங்கியது.

மும்பை பயணி காயம்:
அப்போது அந்த வழியாக சென்ற மும்பை பயணி ஒருவரின் கையில் கண்ணாடி சிதறல்கள் பட்டு காயம் ஏற்பட்டது. இதை கண்ட விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அள்ளிச் சென்ற அதிகாரிகள்:
சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட அதிகாரிகள், நொறுங்கி கிடந்த கண்ணாடிகளை அகற்றினார்கள். மேலும் காயம் அடைந்த பயணிக்கு விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இன்று 54:
இந்நிலையில் இன்று சென்னையில் மழை கொட்டி வருகின்ற நிலையில் உள்நாட்டு முனையம் அமைந்துள்ள பகுதியில் இன்று மீண்டும் மேற்கூரை ஒன்று இடிந்து விழுந்தது.

காயமடைந்த ஊழியர்கள்:
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த விமான நிலைய ஊழியர்கள் இரண்டு பேர் இவ்விபத்தில் காயமடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வழக்கம்போல:
இந்நிலையில் வழக்கம்போல இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 54வது முறையாக நடந்துள்ள இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்னும் சொல்றதுக்கில்லை!
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications