பதன்கோட் தாக்குதல் எதிரொலி- சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பதான்கோட் தாக்குதலுக்கு பிறகு முக்கிய நகரங்களான மும்பை , டெல்லி , சென்னை ஆகிய நகரங்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறத்தல் ஏற்படலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிகப்பட்டுள்ளது.

மேலும் தீவிரவாதிகள் ஊடுறுவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. விமான பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனை மற்றும் வெடிகுண்டு ஆய்வுகளுக்குப் பின்னரே, அனுமதிக்கப்படுகின்றன.
விமான பயணம் மேற்கொள்வோரை வழியனுப்பவும், வரவேற்க வரும் பார்வையாளர்கள் மீதான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications