மதுரை என்கவுன்டரில் பயன்படுத்தப்பட்ட போலீசாரின் துப்பாக்கிகள் பறிமுதல்
Recommended Video

மதுரை: என்கவுன்டரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை சிக்கிந்தர் சாவடியில் வீட்டில் பதுங்கியிருந்த முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய 2 ரவுடிகளை செல்லூர் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடிகள் செல்லூரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு குறி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய செல்லூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் துணை ஆய்வாளர் முருகனின் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் போலீசார் 2 பேரின் துப்பாக்கிளையும் விசாரணைக்காக பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து போலீசார் சுட்ட குண்டுகள் இருந்த காலி உறையையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரவுடி முத்து இருளாண்டி வைத்திருந்த துப்பாக்கி மற்றும் சகுனி கார்த்திக் வைத்திருந்த அரிவாள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications