Bulls are not wild animals.. அதிரடியாக பேசிய அலங்காநல்லூர் வீரத் தமிழச்சி!
காளைகளை நாங்கள் எப்படி வளர்க்கிறோம் என்பதை பீட்டாக்காரர்கள் இங்கு வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண் கூறினார்.
மதுரை: காளைகள் வீட்டு விலங்குகள், காட்டு விலங்கு அல்ல. அதை எப்படி வீடுகளில் வளர்க்கிறோம் என்பதை பீட்டா அமைப்பினர் இங்கு வந்து தங்கிப் பார்த்துக் கொள்ளட்டும் என்று அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆங்கிலத்தில் வீர உரையாற்றியது அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளியுள்ளது.

அலங்காநல்லூர் மக்கள் குறிப்பாக பெண்கள் படை முன்பை விட அதிக பலத்துடன் உறுதி குலையாமல் தொடர்ந்து வீராவேசமாக போராடிக் கொண்டுள்ளனர். அவசரச் சட்டம் எங்களுக்குத் தேவையில்லை. நிரந்தர சட்டம் தான் தேவை என்று கூறி அவர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் போராடிக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சன் செய்திகளுக்கு ஒரு அலங்காநல்லூர் அளித்த பேட்டி பலரையும் கவர்ந்துள்ளது. கிராமப்புற பெண்கள் என்றாலே இளக்காரமாக பார்க்கும் பீட்டா போன்ற பீட்டர் பாட்டிகளுக்கு இந்தப் பெண் அழகான ஆங்கிலத்தில் பேசியது நிச்சயம் சகிக்க முடியாத விஷயமாகத்தான் இருக்கும்.
அப்பெண் பேசுகையில், 3 வருடமாக போராடிக் கொண்டுள்ளோம். 3 வருடமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். சிறு கிராமமாக அலங்காநல்லூர் கிராம மக்களின் கோரிக்கையாக இது இருந்தது. இன்று உலகமே எங்களுக்காகப் போராடுகிறது. இதுவரை திரும்பிப் பார்க்காத அரசுகள் இப்போது அவசரச் சட்டத்துடன் வந்துள்ளன. இதற்குக் காரணம் தமிழர்களின் ஒற்றுமைதான்.

தமிழிர்கள் விழித்துக் கொண்டு விட்டனர். ஆட்சியாளர்கள் இப்போதுதான் இதை உணர்ந்து உள்ளனர். அதன் வெளிப்பாடுதான் அவசரச் சட்டம். ஆனால் இது எங்களுக்கு வேண்டாம். அதில் உடன்பாடும் இல்லை. திருப்தியும் இல்லை. நிரந்தரச் சட்டமே எங்களுக்குத் தேவை.
எந்த ஆட்சி வந்தாலும், எந்த ஆண்டு வந்தாலும், எந்த அமைப்பு வந்தாலும் ஜல்லிக்கட்டை நிறுத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பு தரும் சட்டம்தான் தேவை. எந்த வகையிலும் மாற்றம் இருக்காத, சுதந்திரமான முறையில் ஜல்லிக்கட்டை நடத்தக் கூடிய வகையிலான சட்டம்தான் தேவை.
குறிப்பிட்ட தேதியில் வருடா வருடம் தங்கு தடையின்றி ஜல்லிக்கட்டை நாங்கள் நடத்த வேண்டும். அந்த சட்டம்தான் வேண்டும். அதுதான் தேவை. பீட்டா அமைப்பு கூறுகிறது காளைகள் வீட்டு விலங்குகள் இல்லை என்று. Bulls are not wild animals, they are pet animals. Because we are taking care of them very well. We are raising them in our homes. முதல்வரின் அறிவிப்பை நாங்கள் ஏற்கவில்லை. அதை எதிர்த்து எங்களது போராட்டம் தொடருகிறது என்றார் அப்பெண்.
ராதா ராஜன் போன்ற பெண்களை கேவலமாக விமர்சிக்கும் விலங்குகள் நல, பீட்டா கோஷ்டிகளின் காதுகளை இந்தப் பெண்ணின் பேச்சு போய் நன்றாக அறையட்டும்!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications