ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில், ஐயப்பன் என்பவரை சுட்டுப் பிடித்தது போலீஸ். தலைமறைவாக இருந்த நெட்டூரைச் சேர்ந்த ஐயப்பன், போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் சுட்டுப் பிடித்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்​குளம் அருகே நேற்​று ​முன்​தினம் நெட்டூரில் நடந்த திருமண விழா​வில் புகுந்த கும்​பல் ஒன்று, அரி​வாள், கத்தி போன்ற ஆயுதங்​களால் அங்கு இருந்​தவர்​களை சரமாரி​யாக வெட்​டியது. இதில், 6 பேர் பலத்த காயமடைந்​தனர்.

Alangulam Sickle Attack Case

இந்த தாக்​குதலில் ஈடு​பட்​ட​வர்​களை கைது செய்​யக்​கோரி நெட்​டூரில் ​மக்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். தாக்​குதல் சம்​பவத்​தில் ஈடுபட்​ட​வர்​களை பிடிக்க மாவட்​டம் முழு​வதும் வாகன சோதனை தீவிரப்​படுத்​தப்​பட்​டது. இதில் 3 சிறு​வர்​கள் உள்பட 8 பேரை போலீ​சார் கைது செய்​தனர்.

ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோயில் தெருவில் உள்ள வாலிபர் ஒருவருக்கு நேற்று முன் தினம் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது பிளக்ஸ் போர்டு வைப்பது தொடர்பாக மணமகன் வீட்டை சேர்ந்த நபர்களுக்கும் மதுபோதையில் அங்கு வந்த நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர், கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஒடியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஐயப்பன் என்பவரை சுட்டுப் பிடித்தது போலீஸ். தலைமறைவாக இருந்த நெட்டூரைச் சேர்ந்த ஐயப்பன், போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் அவரைச் சுட்டுப் பிடித்தனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+