ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!
தென்காசி: ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில், ஐயப்பன் என்பவரை சுட்டுப் பிடித்தது போலீஸ். தலைமறைவாக இருந்த நெட்டூரைச் சேர்ந்த ஐயப்பன், போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் சுட்டுப் பிடித்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நேற்று முன்தினம் நெட்டூரில் நடந்த திருமண விழாவில் புகுந்த கும்பல் ஒன்று, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அங்கு இருந்தவர்களை சரமாரியாக வெட்டியது. இதில், 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி நெட்டூரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 3 சிறுவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோயில் தெருவில் உள்ள வாலிபர் ஒருவருக்கு நேற்று முன் தினம் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது பிளக்ஸ் போர்டு வைப்பது தொடர்பாக மணமகன் வீட்டை சேர்ந்த நபர்களுக்கும் மதுபோதையில் அங்கு வந்த நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர், கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஒடியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஐயப்பன் என்பவரை சுட்டுப் பிடித்தது போலீஸ். தலைமறைவாக இருந்த நெட்டூரைச் சேர்ந்த ஐயப்பன், போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் அவரைச் சுட்டுப் பிடித்தனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications