மத்திய அரசின் புதிய சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் நடந்த பந்த்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை
சென்னை: மத்திய அரசின் புதிய போக்குவரத்து சட்டத்தை கண்டித்து நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.
நடைமுறையில் உள்ள மோட்டார் வாகன சட்டம் 1998ஐ முழுமையாக மாற்றி சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015ஐ மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்ய உள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் இந்த புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பல பாதிப்புகள் உள்ளது என்று கூறி பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து புதிய சட்டத்தை எதிர்த்து நேற்று நாடு தழுவிய அளவில் பேருந்து, ஆட்டோ, டாக்சிகள் ஆகியவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

தமிழகத்தில்
தமிழகத்தில் சி.ஐ.டி.யு., தொ.மு.ச. பேரவை உள்பட 12 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தமிழகத்தில் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. பல்வேறு இடங்களில் ஆட்டோக்கள், லாரிகள், டாக்சிகள் இயக்கப்பட்டன.

சென்னை
சென்னையில் சில இடங்களில் ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆனால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் பேருந்துகளும், ஆட்டோக்களும் இயக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டம்
மாநிலத்தின் சில பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின்ர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மத்திய அரசின் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லாரிகள்
தமிழகத்தில் நேற்று 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள், 55 ஆயிரம் மணல் லாரிகள் இயக்கப்பட்டன. புதிய சட்டம், சுங்கவரி கட்டணம் ஆகியவை குறித்து வரும் 12ம் தேதி மத்திய அமைச்சர் கட்காரியை சந்தித்து பேச உள்ளதால் லாரி உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.

கேரளா
வேலை நிறுத்தத்தால் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கேரளாவில் அரசு பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆனால் தனியார் பேருந்துகள் ஓடின. கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. பெங்களூரில் ஓடிய அரசு பேருந்துகள் மீது கல்வீசப்பட்டது.
-
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications