ஊதிய உயர்வு கோரி நாமக்கல்லில் விசைத்தறி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஊதிய உயர்வினை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. சுமார் ஒரு லட்சம் தொழிலளார்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலை சார்ந்து உள்ளனர்.
இந்தநிலையில் ஊதிய உயர்வு கேட்டு விசைத்தறி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றும் முன்னேற்றம் ஏற்படாததால் நாமக்கல் ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
25 சதவிகித ஊதிய உயர்வு அளிப்பதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்த நிலையில், இதற்கு உடன்படாத விசைத்தறி தொழிலாளர்கள் 35 சதவிகிதம் அளிக்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications