அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு பார்சலில் வந்த துப்பாக்கிகள்... விமான நிலையத்தில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு பார்சலில் வந்த துப்பாக்கிகள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து விமானம் வாயிலாக சென்னைக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பார்சலில் வந்த பொருட்களை அவர்கள் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு பார்சலில் இரண்டு துப்பாக்கிகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் 6 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. அந்த துப்பாக்கிகளை கோவையைச் சேர்ந்த சூரியதேவன் என்பவர் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, சூரியதேவனைக் கைது செய்த போலீசார், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications