பிரதமர் பதவிக்கு அம்மாவை தவிர யாரும் சரிபட்டு வரமாட்டாங்க: சிங்கமுத்து
ஈரோடு: முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான், பிரதமர் பதவிக்கு சரிபட்டு வருவாங்க என்று நடிகர் சிங்கமுத்து பேசினார்.
ஈரோடு பகுதியில் நடிகர்கள் சிங்கமுத்து, செந்தில் ஆகியோர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது நடிகர் சிங்கமுத்து பேசும் போது சினிமா வசனத்தை உதாரணம் கூறி பேசினார்.
நான் ஒரு படத்துல வடிவேலுவை பார்த்து; ‘‘அதற்கு இவன் சரிபட்டு வரமாட்டான்'' என்று பேசுவேன். அதேபோல் தமிழ்நாட்டில் இப்போது தி.மு.க. சரிபட்டு வராது. காங்கிரஸ் சரிபட்டு வராது. விஜயகாந்த் உள்பட யாரும் தமிழ்நாட்டில் சரிபட்டு வரமாட்டாங்க. நம்ம முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான், அதற்கு சரிபட்டு வருவாங்க என்றார்.

மின் மிகை மாநிலம்
மக்கள் அனைவரும் இரட்டை இலைக்கு ஓட்டு போட தயாராக இருக்காங்க. முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது. அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க. வால் தமிழ்நாடு இருண்டு கிடந்தது. எந்த மின்திட்டமும் நிறைவேற்றவில்லை. இப்போம் அ.தி.மு.க. மீது பழி போடுறாங்க.

ஜெ.பிரதமராகவேண்டும்
முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தான் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவும் இப்படி தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் நம்ம முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வரவேண்டும். அதற்கு எல்லோரும் இரட்டை இலைக்கு ஓட்டு போடணும் என்றார்.

டொனேசன் வாங்கும் விஜயகாந்த்
நடிகர் செந்தில் பேசும் போது,‘‘ ஊழலை ஒழிப் போம்னு விஜயகாந்த் சொல்கிறார். ஆனால் அவர் காலேஜிலே டொனேஷன் வாங்குகிறார். அவர் ஊழலை பற்றி எப்படி பேசலாம்?
புரட்சி தலைவரும், புரட்சி தலைவியும் சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறினார்கள். ஆனால் கருணாநிதி எந்த கஷ்டமும் படவில்லை. மக்களை ஏமாற்றியே வளர்ந்தார். இன்னும் மக்களை ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்'' என்று கூறினார்.

நடிகை பபிதா பிரச்சாரம்
மக்கள் ஆட்சி அமையவும், ஜெயலலிதா முதல்வராகவும் எப்படி ஒற்றுமையாக செயல்பட்டோமோ அதுபோல் பொதுமக்கள் தற்போது ஒற்றுமையுடன் இருந்து 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும், ஜெயலலிதா பிரதமர் ஆக்கப்பட வேண்டும் என்று நடிகை பபிதா பேசினார்.

விஜயகாந்த் கஞ்சத்தனம்
கருப்பு எம்.ஜி.ஆர். என கூறிக்கொள்ளும் விஜயகாந்த் எச்சில் கையால் கூட காக்கை ஓட்டமாட்டார். விஜயகாந்த் பேசும் போது எதிர்கட்சி கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள், எனக்கு ஓட்டு போடுங்கள் என கூறி மக்களை ஊழலுக்கு அழைத்துச்செல்கிறார் என்றார் பபிதா.












Click it and Unblock the Notifications