16 பொருட்கள் நிரம்பிய அம்மா குழந்தைகள் நல பெட்டகம்.. "பச்சை" சூட்கேஸில் வைத்து வழங்கிய அமைச்சர்கள்
சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள 16 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைகள் நல பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நடந்தது. அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் இதில் கலந்து கொண்டு வழங்கினர்.
பச்சை நிற சூட்கேஸில் இந்தப் பொருட்களை வைத்து பிரசவித்த இளம் தாய்மார்களுக்கு இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சென்னையில்
சென்னையில் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பாலகங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த சூட்கேஸை இளம் தாய்மார்களுக்கு வழங்கினர்.

செய்யாறு
செய்யாறு அரசு மருத்துவமனையில் சிறப்பு அழைப்பாளாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முக்கூர்.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பிரசவித்த தாய்மார்களுக்கு பராமரிப்பு துண்டு, குழந்தை உடை, கொசுவலை, குளியில் சோப்பு, கைகழுவும் திரவம் உள்பட 16 வகையான பொருடகள் அடங்கிய குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.

ஆரணியில்
ஆரணி அரசு மருத்துவமனையில் நகராட்சித் தலைவி ஆனந்தகுமாரி தொடங்கி வைத்தார். மருத்துவமனை அதிகாரி கவிதா, டாக்டர்கள் சுதா, சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூரில்
அரியலூரில் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி மற்றும் அரியலூர் சட்டசபை உறுப்பினர் துரை.மணிவேல் முன்னிலை வகித்தனர்.

என்னென்ன உள்ளது
இப்பெட்டகத்தில், குழந்தைகளுக்கான நகவெட்டி, குழந்தை உடை, குழந்தை படுக்கை, குழந்தை எண்ணெய், பொம்மை மற்றும் கிலுகிடுப்பை, கைகழுவும் திரவம், துண்டு, குழந்தை நாப்கின், குழந்தை கொசுவலை, குழந்தை சாம்பு, சௌபாக்ய சுண்டி லேகியம் மற்றும் பொருட்கள் வைக்கும் பெட்டி உள்ளிட்ட பொருட்கள் இருக்கும்.
-
வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி












Click it and Unblock the Notifications