For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்லூரி விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல் பழனி சாலையில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் மாணவி அதிகாலையில் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    கல்லூரி விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை-வீடியோ

    திண்டுக்கல் : பழனி சாலையில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரியின் மாணவி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் உள்ள PSNA தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார் மாணவி தாரணி. இவர் இன்று அதிகாலையில் விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    தாரணி படுகாயமடைந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தற்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     கதறிய மகள்

    கதறிய மகள்

    இந்நிலையில் மாணவி தாரணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தாயார் தெரிவித்துள்ளார். "நேற்று இரவு எங்களுக்கு போன் செய்து விடுதி நிர்வாகத்தினர் கொடுமைபடுத்துவதாகச் சொன்னாள், காலையில் வந்து அழைத்து செல்வதாகக் கூறினோம். என்னுடைய மகள் மன உளைச்சலில் இருக்கிறாள் என்று அவளை பார்த்து கொள்ளச் சொல்லுமாறு கல்லூரி நிர்வாகத்தினர், விடுதி காப்பாளர்களுக்கு போன் செய்தோம்.

     உண்மை வெளி வரவேண்டும்

    உண்மை வெளி வரவேண்டும்

    ஆனால் ஒருவர் கூட போனை எடுக்கவேயில்லை, என் மகள் போல வேறு யாரும் பாதிக்கக் கூடாது. கல்லூரியில் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும், என்னுடைய பிள்ளை செப்புச் சிலை போல இருப்பாள் அவளை என்ன கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டினார்களோ தெரியவில்லையே.

     தகராறு

    தகராறு

    வார்டனுக்கும் தனக்கும் தகராறு இருப்பதாக தாரணி சொன்னாள். என்னுடைய மகள் கடுமையாக நடந்து கொள்பவள், யாராவது குறை சொன்னால் தாங்கிக்கொள்ள மாட்டாள்.

     நிர்வாகம் மறைக்கிறது

    நிர்வாகம் மறைக்கிறது

    என்னுடைய மகள் விழுந்த இடத்திலேயே இறந்துவிட்டாள். ஆனால் அவள் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தான் உயிரிழந்தாள் என்று கல்லூரி நிர்வாகத்தினர் பொய் கூறுகிறார்கள்" என்றும் அவர் கண்ணீர் விட்டுள்ளார்.

    English summary
    A Second year engineering College student Dharani from Palani private college jumped off in the hostel 3rd floor killed herself, her family seeking justice for her death.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X