Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குமரி அருகே காட்டுக்குள் கசமுசா.. முக்கல், முனகல் சத்தத்தால் சிக்கியது கள்ளக்காதல் ஜோடி!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: குமரி மாவட்ட மலைக்காடுக்குள் உள்ள புதர் மறைவில் உல்லாசத்தில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடிகளின் முனகல் சத்தம் அவர்களை காட்டிக்கொடுத்தது.

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட் பகுதி இயற்கை வளம் மிக்க மலைப்பகுதியாகும். ரப்பர் மரங்களும் அடர்த்தியாக காணப்படுகின்றன. எனவே, காதலர்கள், கள்ளக்காதலர்கள், இந்த பகுதிக்குள் சென்று தங்கள் காம இச்சைகளை தணித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது.

சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த, இந்த மலைப்பகுதிக்கு செல்லும் தனியார் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும் உள்ளூர் மக்கள் என்ற போர்வையில் சிலர் உள்ளே நுழைந்துவிடுகின்றனர்.

An illicit affair couple got near kanyakumari

இந்த நிலையில் நேற்று முன்தினம் 42 வயது மதிக்கதக்க பெண்ணும், 30 வயது மதிக்கதக்க வாலிபரும் பைக்கில் மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர். பார்ப்பதற்கு டீசன்டான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் அவர்கள் மீது யாருக்கும் சந்தேகம்வரவில்லை.

காலை 11 மணியளவில் ஜீரோ பாயின்ட் சோதனைச்சாவடியை கடந்து சென்ற அவர்கள், அங்கிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் ஒரு புதர் மறைவில் பைக்கை நிறுத்திவிட்டு பேச்சிப்பாறை அணைக்குள் செல்லும் பகுதி வழியாக இறங்கி சென்று மறைவான ஒரு இடத்தில் சல்லாபத்தில் ஈடுபட்டனர்.

புதர் மறைவில் ஒரு பைக் நிற்பதை அந்த வழியாக சென்ற ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் கவனித்தனர். சந்தேகமடைந்த அவர்கள் அணைக்குள் செல்லும் பகுதி வழியாக இறங்கி சென்றபோது மறைவான இடத்தில் இருந்து முக்கல், முனகல் என சிருங்கார சத்தம் கேட்டுள்ளது. அருகில் சென்ற போது இருவர் ஆடைகளை களைந்துவிட்டு உல்லாசமாக இருந்ததை பார்த்தனர்.

கோபமடைந்த தொழிலாளர்கள், போலீசில் பிடித்துக்கொடுத்துவிடுவோம் என்று கள்ளக்காதல் ஜோடியை எச்சரித்தனர். இதனால் பீதியில் உறைந்த அந்த பெண் கையெடுத்து கும்பிட்டு என் கணவருக்கு தெரிந்தால் வாழ்க்கை சிக்கலாகிவிடும். எனவே இந்த ஒருமுறை மன்னித்துவிட்டுவிடுங்கள் என்று கெஞ்சி கூத்தாடினார்.

அந்த பெண்ணிடம் தொழிலாளர்கள் விசாரித்தபோது, அவர் தக்கலை பகுதியை சேர்ந்தவர் என்பதும், கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதும் தெரியவந்தது. அவருடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர், அவரது உறவினர் என்றும் தெரியவந்தது. கணவர் வெளிநாட்டில் இருப்பதால் தனது விரகதாபத்தை உறவுக்கார வாலிபருடன் தணித்துக்கொள்வதாக அப்பெண் கூறியுள்ளார்.

இதையடுத்து, தொழிலாளர்கள் அவர்களை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+