சசிகலா குடும்ப சொத்துகளை மீட்டு தமிழக மக்களுக்கே தர வேண்டும்... அன்புமணி அட்வைஸ்!

சசிகலா குடும்ப சொத்துகளை மீட்டு தமிழக மக்களிடமே கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: சசிகலா குடும்ப சொத்துகளை மீட்டு தமிழக மக்களிடமே கொடுக்க வேண்டும், ஏனெனில் அது அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்து என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது : சசிகலா குடும்பத்தை சார்ந்த 187 இடங்களில் கடந்த வாரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் மூலம் சுமார் 1400 கோடி மதிப்பிலான பொருட்களும், சொத்துகளும் பிடிபட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 Anbumani ramadoss urges centre to give the assets seized from Sasikala family to the people of tamilnadu

சொத்து சேர்த்த சசிகலா குடும்பத்தில் மட்மே சோதனை நடந்திருக்கிறது. ஆனால் இவர்களுக்கு பணம் சேகரித்துக் கொடுத்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிட்மும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்க வேண்டும். ஏனெனில் சசிகலாவோ, ஜெயலலிதாவோ நேரடியாக சொத்து சேர்க்கவில்லை, இவர்கள் மூலமாகத் தான் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர்.

27 ஆண்டுகாலமாக இவ்வளவு பெரிய அளவில் சொத்து சேர்த்திருக்கிறார்கள். இது உள்நாட்டில் மட்டும் தான் இன்னும் இவர்களுக்கு வெளிநாடுகளில் கணக்கில் அடங்கா சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். அரசு இந்த சொத்துகள் அனைத்தையும் தமிழக மக்களுக்கே மீண்டும் கொடுக்க வேண்டும். ஏனெனில் இது மக்களின் சொத்து, அவர்களை மிரட்டி பறித்து வாங்கப்பட்டது தான் இவை எனவே மக்களுக்கே அவற்றை திரும்ப அளிக்க வேண்டும் என்று அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+