பாளையங்கோட்டை சிறையில் பாமக தொண்டர்களை சந்தித்த அன்புமணி! தைரியம் அளித்த வார்த்தைகள்!
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று காலை பாமக தொண்டர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், அவர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
என்.எல்.சி.க்கு எதிராக பாமக நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாமக தொண்டர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமினில் வெளியே கொண்டு வருவதற்கான சட்டப் போராட்டத்தை பாமக முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் தொண்டர்களை சந்திக்க அன்புமணி ராமதாஸ் பெயரில் சிறைத்துறைக்கு மனு கொடுக்கப்பட்டு அது ஏற்கப்பட்டதை தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு விசிட் அடித்தார் அன்புமணி. அவரது வருகையை ஒட்டி சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அதேபோல் இன்று மதியம் மதுரை மத்திய சிறைக்கு செல்லும் அன்புமணி, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாமக தொண்டர்களையும் சந்தித்து அவர்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் அளிக்கவுள்ளார். இதனிடையே பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, விவசாயிகளுக்கு துணை நிற்க தமிழக அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக நிற்பதாக விமர்சித்தார்.

மேலும், நெய்வேலியில் 3வது நிலக்கரிச் சுரங்கம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியிருப்பதற்கு முதல்வர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என வினவியுள்ளார். விவசாயிகளின் விளை நிலங்களை என்.எல்.சி. கையகப்படுத்தக் கூடாது என்பதும் உரிய இழப்பீடு தர வேண்டும் என்பதும் அன்புமணியின் கோரிக்கையாகும்.
-
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications