கருணாநிதி நலமாக உள்ளாரா?காவேரி மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை காண ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகிறார்.
Recommended Video
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் வந்து நலம் விசாரித்தார்.
சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் வந்து நலம் விசாரித்தார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் 8 வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
காவேரி மருத்துவமனை
இருப்பினும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தேசிய தலைவர்கள், திரைத்துறையினர் காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று வருகை
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க உள்ளார்.
மருத்துவமனைக்கு வருகிறார்
இதற்காக அவர் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை 10.50 மணிக்கு வருகிறார். அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு காரில் வருகிறார்.
குடும்பத்தினரிடம் விசாரிப்பு
இதைத்தொடர்ந்து கருணாநிதியின் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவர்களிடமும் சந்திரபாபு நாயுடு கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
மீண்டும் புறப்படுகிறார்
இதைத் தொடர்ந்து மதியம் 1.10 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு தனி விமானம் மூலம் மீண்டும் ஆந்திரா புறப்படுகிறார்.