ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: மதுரையில் 3 சாட்சிகளிடம் விசாரணை
மதுரை: செம்மரக்கட்டைகளைக் கடத்தியதாக ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட வழக்குத் தொடர்பாக, மதுரையில் 3 சாட்சிகளிடம் ஆந்திரா சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளைக் கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனை தொடர்ந்து மதுரை மக்கள் கண்காணிப்பக குழுவினர் ஆந்திராவிற்கு கொலை தொடர்பான கள ஆய்வுக்கு சென்றனர். அப்போது சம்பவத்தின் சாட்சிகளாக சேகர், இளங்கோ, பாலசந்திரன் ஆகியோரை மீட்டு மதுரைக்கு அழைத்து வந்தனர்.

இது தொடர்பாக அந்த மூன்று சாட்சிகளை விசாரிக்கக் கோரி 60 நாட்களுக்கு முன்பு ஆந்திரா சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தகவல் அனுப்பப் பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று டி.ஐ.ஜி., ரமணா குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் சாட்சிகளிடம் நேரடி விசாரணையைத் தொடங்கினர்.
இந்த விசாரணை தொடர்பாக ரமணாகுமார் கூறுகையில், ‘செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக சாட்சிகளிடம் விசாரிக்க வந்துள்ளோம். விசாரணை இன்றே முடிந்துவிடும் என்று சொல்ல முடியாது, அதன் தன்மையை பொறுத்து இன்னும் சில நாட்கள் தொடரலாம். இவ்வழக்கு நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளதால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து எங்களால் எதுவும் கூற இயலாது' என்றார்.
இந்த விசாரணையின் போது சிறப்பு புலனாய்வு குழுவினரோடு மதுரை ஆர்.டி.ஓ. செந்தில் குமாரியும் உடனிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications