அனிதாவின் மரணம் மிகப்பெரிய இழப்பு... மாணவர்களே தைரியமாக இருங்கள்- செங்கோட்டையன்
மாணவி அனிதாவின் மரணத்தை பெரும் இழப்பாக கருதுகிறேன் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அனிதாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவி அனிதாவின் தற்கொலை மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. தற்கொலைக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள்தான் என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவி மரணம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அனிதாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறினார். மாணவர்களுக்கு ஒருமுறைக்கு 3 முறை வாய்ப்பு வழங்கப்படுகிறது. பொது தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
மாணவர்கள் மன தைரியத்தை இழந்து விட வேண்டாம். தைரியமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும். மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
இதேபோல மாணவி அனிதாவின் மரணம் அதிர்ச்சியளிப்பதாகவும், மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதேபோல அனிதாவின் தற்கொலைக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்பு மகள் அனிதாவின் தற்கொலை வருத்தம் தருகிறது என்றும், அனிதா இப்படி முடிவெடுப்பார் நினைத்து பார்க்கவில்லை என்றும் தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications