நீட் பலி கொண்ட அனிதாவின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் நேரில் அஞ்சலி!
அனிதாவின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
அரியலூர் : மருத்துவ படிப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு குழுமூரில் அவரது வீடு அருகே உள்ள திடலில் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு சாரை சாரையாக வரும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications