அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும்: தொண்டர்களுக்கு ஜெ., அண்ணா பிறந்தநாள் வாழ்த்து மடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்வரும் தேர்தலில் தீயசக்தியை அடியோடு ஒழித்து கட்ட சூளுரை ஏற்போம் என்றும் உள்ளாட்சி தேர்தலிலும் 3 இடைத்தேர்தலிலும் வெற்றி பெற மிகவும் பொறுப்புடனும் கவனமுடனும் பணியாற்ற வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்த கையோடு திருவோண திருநாளான இன்று மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 91000 பேரை அதிமுகவில் இணைத்துள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிற்கு ராசியான செப்டம்பர் 14ம் தேதி புதன்கிழமை நாளான இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் என்றே கூறலாம்.

Anna's Birthday: Jayalalithaa writes letter to ADMK cadres

முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், எதிர்வரும் தேர்தலில் தீயசக்தியை அடியோடு ஒழித்து கட்ட சூளுரை ஏற்போம். தேர்தலில் தீயசக்தியை அடியோடு ஒழித்து கட்ட வேண்டும்.

தமிழகத்தில் தனிமனித காட்டாட்சிகோ குடும்ப ஆட்சிக்கோ இடமில்லை. எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை அரசு நிறைவேற்றி வருகிறது தமிழக மக்கள் தொடர்ந்து நல்லாதரவு வழங்கி வருகின்றனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.

உள்ளாட்சி தேர்தலிலும் 3 இடைத்தேர்தலிலும் வெற்றி பெற மிகவும் பொறுப்புடனும் கவனமுடனும் பணியாற்ற வேண்டும். அப்போது தான் நமது வெற்றி முழுமை பெறும். தொண்டர்கள் அரசு நலப்பணிகளை வாக்காளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+