அண்ணா பல்கலை. ஊழல்: அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்... துணைவேந்தர் சூரப்பா உறுதி
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், எல்லோரும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், எல்லோரும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு தற்போது தமிழகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலையில் விடைத்தாள் மறுத்திருத்தம், மறுகூட்டலில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருக்கிறது. தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள்.

இதில் 200 கோடி ரூபாய் வரை பணம் கைமாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் இந்த முறைகேடு குறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த ஊழல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், மறுமதிப்பீட்டு முறைகேடு புகாரில் தொடர்புடைய அனைவரின் மீது நடவடிக்கை உறுதி. ஊழல், முறைகேடுகளுக்கு அண்ணா பல்கலை.யில் இடமளிக்க முடியாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழலை அனுமதிக்க மாட்டேன்.
ஊழல் நாடு முழுவதும் உள்ள பிரச்சினைதான். விடைத்தாள் மறு மதிப்பீடு ஊழல் தொடர்பாக விசாரணை நடைபெறும். ஊழல் தொகை குறித்த சரியான தகவல் இல்லை.
தவறு நடந்து விட்டது, இனி தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஊழல் நடைபெறவில்லை. அண்ணா பல்கலைக்கழக சார்பு கல்லூரியில்தான் ஊழல் நடந்துள்ளது.
அரசிடமிருந்து சலுகை கேட்டு கோரிக்கை வந்துள்ளது. அதை நான் அனுமதிக்க மாட்டேன்.விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் பலருக்கு தொடர்புள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அண்ணா பல்கலை. வளாகத்தில் உள்ளவர்கள் என கூற முடியாது என்று துணைவேந்தர் சூரப்பா பேட்டியளித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications