வம்பா போச்சே! ஆர்.எஸ்.பாரதி ரூ.500 கோடி + 1 ரூபாய் இழப்பீடு தரவேண்டும்.. அண்ணாமலை அனுப்பிய நோட்டீஸ்!
சென்னை : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்கவேண்டும் எனக் கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆருத்ரா விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
திமுகவினரின் சொத்து பட்டியல் என அவதூறு பரப்பியதாக அண்ணாமலைக்கு திமுகவினர் அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஆருத்ரா விவகாரத்தில் அண்ணாமலை ரூ.84 கோடி பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தார் ஆர்.எஸ்.பாரதி. இந்நிலையில், ஆருத்ரா விவகாரத்தில் எனக்கு தொடர்பு இல்லை, என் மீது அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலமாக அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

திமுக மீது பரபர குற்றச்சாட்டு : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக பிரமுகர்களின் சொத்துப்பட்டியல் எனக் கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் சொத்து விவரங்கள் இடம்பெற்றிருந்தன. திமுகவினரின் முதல் கட்ட சொத்து பட்டியல் இது எனக் கூறிய அவர், இது தொடர்பாக சிபிஐ-யிடம் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை திமுக முற்றிலுமாக மறுத்தது. அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்டதுமே செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை எந்தவித ஆதாரமும் இன்றி அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். அண்ணாமலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், கோர்ட் கோர்ட்டாக அண்ணாமலை டூர் போகப் போகிறார் தெரிவித்தார்.
வக்கீல் நோட்டீஸ் : இதைத்தொடர்ந்து அண்ணாமலை தனது கருத்துக்கு மன்னிப்பு கோரவில்லை என்றால் 500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி என திமுகவினர் அடுத்தடுத்து தங்களைப் பற்றி அண்ணாமலை அவதூறு பரப்பியதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி, ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரூ.84 கோடி பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தார்.

அண்ணாமலை நோட்டீஸ் : இந்த நிலையில், ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் தான் ரூ.84 கோடி பெற்றதாக ஆர்.எஸ்.பாரதி கூறிய குற்றச்சாட்டை அண்ணாமலை மறுத்துள்ளார். மேலும், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய புகாரில் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்கவேண்டும் என அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் பால் கனகராஜ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க மறுத்தால், அவர் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடுக்கப்படும் எனவும் அண்ணாமலை தரப்பு அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு!












Click it and Unblock the Notifications