காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். நேற்று10 மாவட்டங்கள் உட்பட 12 இடங்களில் வெயில் சதமடித்தது.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி, கூறியபோது, தென் மத்திய மகாராஷ்டிரா முதல் குமரிக்கடல் வரை காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருந்தது. இது தற்போது தெலங்கானாவில் இருந்து உள் தமிழகம் வழியாக குமரிக்கடல் வரை நீடிக்கிறது.
இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலி இன்று லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்று தெரிவித்தார்..












Click it and Unblock the Notifications