திருவான்மியூரைச் சேர்ந்த தொழிலதிபர் செய்யூரில் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை
திருவான்மியூரைச் சேர்ந்த தொழிலதிபர் செய்யூரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Recommended Video

சென்னை : திருவான்மியூரைச் சேர்ந்த தொழிலதிபர் கடந்த சில தினங்களுக்கு முன் மாயமான நிலையில், அவரது சடலம் செய்யூர் அருகே மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்போட்டியின் காரணமாக நடந்த இக்கொலையில் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவமூர்த்தி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே சென்னையைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த திருவான்மியூர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கலியமூர்த்தி திடீரென காணாமல் போனார்.

காட்டிக் கொடுத்த செல்போன்
இதுகுறித்து அவரது மனைவி ஹேமா திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்

திடுக்கிடும் தகவல்கள்
செல்போன் சிக்னல் கடைசியாக காட்டிய திருவான்மியூர் சிக்னல் பகுதியில் சிசிடிவி கேமராக்களை வைத்து விசாரித்தது போலீஸ். அதில் கார் ஒன்றில் கலியமூர்த்தி மர்ம நபர்களால் இழுத்துச் செல்லப்பட்டு ஏற்றப்படுவது பதிவாகி இருந்தது.

வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்
போலீசார் சந்தேகத்தின் பேரில் பேரில் கலியமூர்த்தியின் நண்பர்களான முத்து, மணிகண்டனிடம் உரிய முறையில் விசாரித்தது. அப்போதுதான் கலியமூர்த்தி கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

உடலைத் தோண்டும் பணி
மேலும் பரமசிவம், செந்தில், தர்மா ஆகிய நண்பர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. கலியமூர்த்தி உடல் புதைக்கப்பட்ட செய்யூர் அருகில் உள்ள ஓதியூர் பகுதிக்கு கொலையாளிகளை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு கலியமூர்த்தி உடல் மீட்கப்பட்டது. தலைமறைவான 3 பேரை தேடி வருகிறது போலீஸ்.












Click it and Unblock the Notifications