ஒருதலைக் காதலால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் நவீனா மரணம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஒருதலைக் காதலால் செந்தில் என்ற இளைஞரால் தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு ரோடு, வ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கப்பன், கூலி தொழிலாளி. இவரது மகள் நவீனா (18). விழுப்புரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் செந்தில் (28) தனியார் பஸ் டிரைவர். இவர் நவீனாவை ஒருதலையாக காதலித்துள்ளார். கடந்த ஆண்டு மாம்பழப்பட்டு ரயில்வே கேட் அருகே வலது கை வலது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த செந்தில் ஒரு மாத சிகிச்சைக்குப் பின் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் ஜூலை 3ம் தேதி புகார் கொடுத்தார்.

அதில் நவீனாவின் பெற்றோர் துாண்டுதலின்பேரில் தன்னை கை, கால்களை வெட்டி ரயில் பாதையில் வீசி விட்டுச் சென்றதாக தெரிவித்திருந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நவீனா பெற்றோர் மீது செந்தில் பொய் புகார் கொடுத்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து நவீனா கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்திலை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வந்த செந்தில், நவீனா வீட்டிற்கு சென்று அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், பிளஸ் 2 முடித்த நவீனா மேற்படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் நவீனா தனது 14 வயது தங்கை மற்றும் 11 வயது தம்பியுடன் வீட்டில் இருந்தார்.
அப்போது நவீனாவின் வீட்டிற்கு பெட்ரோல் கேனுடன் சென்ற செந்தில், அவரது தங்கை, தம்பியை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டினார். பின், பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டு நவீனாவை கட்டிப் பிடித்துக் கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் மரணமடைந்தார். படுகாயமடைந்த நவீனா மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீனா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் நவீனா உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது விழுப்புரத்தில் ஒருதலைக்காதலுக்கு இளம்பெண் நவீனா பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications