மோடி வருகைக்கு எதிராக மதுரை, திருச்சியில் போராட்டம்!
திருச்சி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் திருச்சி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.
மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட நீதிமன்றம் முன்பாக மோடியின் உருவப்படத்தை எரித்து அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எதிரே மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இளந்தாமதரை மாநாடு நடைபெறும் திருச்சியிலும் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தோர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து நகரங்களிலும் தடையை மீறி போராட்டம் நடத்தியோர் கைது செய்யப்பட்டனர். பெரியார் திராவிடர் கழகத்தினரும் திருச்சியில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
இதேபோல் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், திருச்சி பேருந்து நிலையம் அருகே கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். அவர்கள் 500 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications