ஜெயலலிதா கவலைக்கிடம்: ஊழியர்களை அவசரமாக கிளம்பச் சொன்ன அப்பல்லோ நிர்வாகம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக கவலைக்கிடம் என்ற அறிவிப்பை வெளியிட்ட கையோடு, தனது மருத்துவமனை ஊழியர்களில் பெரும்பான்மையோரை அவசர அவசரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.
அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் தவிர்த்து, நூற்றுக் கணக்கான நிர்வாக ஊழியர்கள் உள்ளனர்.

இவர்களில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களில் சிலரைத் தவிர்த்து, நிர்வாக ஊழியர்கள் அனைவரையும் பிற்பகல் 2 மணிக்கே வீடுகளுக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளது அப்பல்லோ நிர்வாகம்.
இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நர்ஸ்கள், மருத்துவர்கள், வார்டு பணியாளர்கள் தவிர, மீதிப் பணியாளர்கள் அனைவரும் வீடுகளுக்குத் திரும்பினர்.












Click it and Unblock the Notifications