பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை: முதல்வருக்கு அப்பாவு கடிதம்
சீன தயாரிப்பான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். சீன லைட்டருக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வடநாட்டு நிறுவனங்கள் லைட்டர் மூலப் பொருள்களை இறக்குமதி செய்து தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டு அழிந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும், வேலூர் மாவட்டம், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீப்பெட்டி தொழில் கடந்த 100 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்தியத் தேவையில் 80 சதவீதம், பன்னாட்டுச் சந்தையில் 50 சதவீத தீப்பெட்டிகள் தமிழகத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன.தீப்பெட்டி ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ 600 கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

சில ஆண்டுகளாக சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் வருகையால் தீப்பெட்டி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. தற்போது பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களும், உதிரிபாகங்களும் நேபாளம் வழியாக கொண்டு வரப்பட்டு நாடு முழுவது 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், தீப்பெட்டி விற்பனை மிகவும் குறைந்து தொழிற்சாலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பாவு முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது-
விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் தீப்பெட்டி உற்பத்தி தொழில் முக்கியத் தொழிலாக விளங்கி வருகிறது. கடந்த காலத்தில் வெளிநாட்டு தீப்பெட்டிகள் மற்றும் சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி காரணமாக தீப்பெட்டி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்தது. இதைத்தொடர்ந்து, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 2022ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதியன்று தாங்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியதன் மூலமாக இந்த சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
மேலும், வெளிநாட்டு தீப்பெட்டி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. சீன லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வடநாட்டு நிறுவனங்கள் லைட்டர் மூலப் பொருள்களை இறக்குமதி செய்து தயாரிக்கின்றனர். மேலும், குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனை மற்றும் பன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications