அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் கே.சி. பழனிச்சாமி, அஞ்சுகம் வேட்புமனு தாக்கல்
அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் கே.சி. பழனிச்சாமியும், அஞ்சுகம் பூபதியும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை: அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் கே.சி. பழனிச்சாமியும் அஞ்சுகம் பூபதியும் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
வரும் 19ம் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களை ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுக அறிவித்தன.

இதனையடுத்து, திமுக வேட்பாளரான கே.சி. பழனிச்சாமி அரவக்குறிச்சி தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது, எ.வ. வேலு, சின்னச்சாமி மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
இதே போன்று தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் அஞ்சுகம் பூபதி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் இன்று செய்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது, சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.ஆர். உள்ளிட்ட திமுகவின் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்.
வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் அஞ்சுகம் பூபதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்தத் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெருவேன். அதிமுக ஆட்சி ஒரு செயலற்ற ஆட்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் இங்கு ஏற்படும் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படுவதில்லை. அந்தக் குறைகளை முறையிட்டு திமுக சார்பில் தீர்த்து வருகிறோம். எனவே, நாங்கள் செய்த நல்லதைச் சொல்லி வாக்கு சேகரிப்போம். தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொண்டால் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெருவோம் என்று அஞ்சுகம் பூபதி கூறினார்.
இந்த 2 தொகுதிகளிலும் கடந்த மே மாதமே தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் பணப்பட்டுவாடா புகார் கடுமையாக எழுந்ததையடுத்து தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதனையடுத்து, வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 26ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
வேட்புமனுக்களை அளிக்க நவம்பர் 2ம் தேதி கடைசியாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3ம் தேதியும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற நவம்பர் 5ம் தேதியும் கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடைபெற உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications