தாங்க முடியாத பணிச்சுமை.. மனம் உடைந்த ஆயுதப்படை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சென்னை பரங்கிமலை ஆயுதப்படை போலீஸ் இரவுப் பணியின் போது தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை அதிகமாக இருந்ததே இவரது தற்கொலைக்குக் காரணமாக கூறப்படுகிறது.
சென்னை: பணிச்சுமை அதிகரித்து மனம் உடைந்த ஆயுதப்படை போலீஸ் இரவுப் பணியின் போது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரங்கிமலை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணி புரிந்து வந்தார் கோபிநாத். மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த இவர், தூத்துக்குடியில் பயிற்சியை முடித்து பழனி பட்டாலியனில் பணியில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து பரங்கிமலை ஆயுதப்படைக்கு அவர் மாற்றப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் இரவுப் பணியில் ஈடுபட்ட கோபிநாத், நள்ளிரவிற்கு பின்னர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பணிச் சுமை அதிகமாக இருந்தது என்பதாலும், பணி இட மாற்றம் நடைபெற்றதாலும் மனம் உடைந்து காணப்பட்ட கோபிநாத், இரவு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆயுதப்படை போலீஸ் கோபிநாத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்ட இந்த சம்பம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications