மாட்டிறைச்சி திருவிழா நடத்திய சென்னை ஐஐடி மாணவர்களால் பரபரப்பு
சென்னை: சென்னை ஐஐடி மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. சுமார் 50 மாணவர்கள் அதில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மாட்டிறைச்சியை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், ஐஐடி மாணவர்கள் இந்த திருவிழாவை நடத்தியுள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேரளாவில் நேற்று மாட்டிறைச்சி திருவிழா நடத்திய நிலையில் தற்போது சென்னைக்கும் போராட்டம் பரவியுள்ளது.
அதேநேரம், காங்கிரஸ் கட்சியின் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் இவ்வாறு செய்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கேரள முதல்வர் பினராயி விஜயன் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி, நாக்பூரிடமிருந்து சாப்பிடும் வழக்கத்தை நாங்கள் கற்க தேவையில்லை என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications