சசிகலா புஷ்பாவைக் கைது செய்யுங்கள்.. திருச்சி போலீஸில் அதிமுக புகார்!
திருச்சி: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவரது மாண்பைக் குலைக்கும் வகையில் ராஜ்யசபாவில் பேசிய எம்.பி. சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை அதிமுக வழக்கறிஞரும், பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவருமான பாண்டியன் சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி இன்று திருச்சி போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகணனிடம் நேரில் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பாண்டியன் பேசுகையில், தன்னை முதல்வர் தாக்கியதாக நாடாளுமன்றத்தில் போய் பேசியிருக்கிறார் சசிகலா. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காவல்நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல், நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வரின் மாண்பை குறைக்கும் வகையில், திட்டமிட்டு அவதூறு பேசியுள்ளார்.
முதல்வர் தன்னை தாக்கியதாகவும், ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாகவும் அவர் வாய்மொழியாக மட்டுமே சொல்கிறார். இதற்கு அவரிடம் சாட்சியங்கள் இல்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் தமிழக முதல்வர் மீது குற்றஞ்சாட்டியதற்காக சசிகலா புஷ்பா மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளோம். சட்ட நடவடிக்கைகள் எடுக்க 20 நாட்கள் காத்திருப்போம். இல்லையெனில் அவர் மீது நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடருவோம் என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications