வழக்கில் ஆஜராகாத புதிய தமிழகம் கிருஷ்ணசாமி.. கோர்ட் பிடிவாரண்ட்

Subscribe to Oneindia Tamil

Arrest warrant against Dr Krishnasamy
ராஜபாளையம்: தேர்தல் வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத காரணத்தால் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ராஜபாளையம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று, தென்காசி தனித் தொகுதியில் போட்டியிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி.

தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கிருஷ்ணசாமி உட்பட 4 பேர் மீது ராஜபாளையம் தெற்கு, சேத்தூர் மற்றும் தளவாய்புரம் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கில் தொடர்புள்ள 3 பேரும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரினர். கோர்ட் உத்தரவுப்படி அவர்கள் ராஜபாளையம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றனர். டாக்டர் கிருஷ்ணசாமி மட்டும் கோர்ட் ஆஜராகாமல் இருந்தார். முன் ஜாமீன் பெறவில்லை.

இந்நிலையில் நேற்று ராஜபாளையம் நீதிமன்றம், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+