அவதூறு வழக்கு: ஆஜராகாத விஜயகாந்துக்கு விழுப்புரம் கோர்ட் பிடிவாரண்ட்!

தமிழகம் முழுவதும் விஜயகாந்துக்கு எதிராக பல நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. இதில் சிலவற்றில் விஜயகாந்த் நேரில் ஆஜராகி வருகிறார். ஆஜராகாத நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கவும் செய்கின்றனர்.
இதேபோல் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் பேசிய விஜயகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசினார் என்று ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி மட்டும் விஜயகாந்த் நேரில் ஆஜராகி இருந்தார்.
பின்னர் நடைபெற்ற தொடர் விசாரணைகளின் போதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை. கடந்த 6-ந் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை. அப்போது அடுத்த விசாரணைக்கு விஜயகாந்த் வரவில்லை எனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்திருந்தார்.
இதனிடையே இன்று இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் அலுவல்கள் இருப்பதால் விஜயகாந்த் ஆஜராக இயலவில்லை என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 7-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications