அவதூறு வழக்கு: ஆஜராகாத விஜயகாந்துக்கு விழுப்புரம் கோர்ட் பிடிவாரண்ட்!

தமிழகம் முழுவதும் விஜயகாந்துக்கு எதிராக பல நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. இதில் சிலவற்றில் விஜயகாந்த் நேரில் ஆஜராகி வருகிறார். ஆஜராகாத நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கவும் செய்கின்றனர்.
இதேபோல் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் பேசிய விஜயகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசினார் என்று ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி மட்டும் விஜயகாந்த் நேரில் ஆஜராகி இருந்தார்.
பின்னர் நடைபெற்ற தொடர் விசாரணைகளின் போதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை. கடந்த 6-ந் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை. அப்போது அடுத்த விசாரணைக்கு விஜயகாந்த் வரவில்லை எனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்திருந்தார்.
இதனிடையே இன்று இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் அலுவல்கள் இருப்பதால் விஜயகாந்த் ஆஜராக இயலவில்லை என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 7-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications