ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி கமிஷன் இன்று ஆய்வு!
அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி கமிஷன் இன்று ஆய்வு மேற்கொள்கிறது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி கமிஷன் இன்று ஆய்வு மேற்கொள்கிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிப்பட்டதை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த கமிஷன் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைகள், எம்பாமிங் செய்யப்பட்ட அறை, மருத்துவ குழு தங்கி இருந்த அறை, அதிகாரிகள், அமைச்சர்கள், சசிகலா தங்கி இருந்த அறை என 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
வழக்கறிஞர்கள் நிரஞ்சன், பார்த்தசாரதி ஆகியோர் ஆய்வு மேற்கொள்கின்றனர். சசிகலா தரப்பில் இரு வழக்கறிஞர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வு காரணமாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 2008ஆம் எண் அறையில் உள்ள நோயாளிகளை வேறு அறைக்கு மாற்றினால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அப்போலோ கருதினால் இழப்பீடு தர ஆணையம் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆறுமுகசாமி கமிஷனுடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லவுள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications