ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்ய 7 பேருக்கு சம்மன்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்த 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்த 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலா தனது வாக்கு மூலத்தை அண்மையில் தாக்கல் செய்தார்.

ஆணையத்தில் ஆஜராகிறவர்களிடம் அவ்வப்போது குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும் சசிகலா தரப்பு வக்கீலுக்கு ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் வரும் 28ஆம் தேதி விசாரணை கமிஷனில் ஆஜராகுமாறு 7 பேருக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
டாக்டர்கள் விமலா, நாராயணபாபு, முத்துசெல்வன், கலா, டிட்டோ, தர்மராஜன், பாலாஜி ஆகிய 7 பேரிடம் மார்ச் 28 ம் தேதி சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்ய உள்ளார்.












Click it and Unblock the Notifications