தமிழகத்தில் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.... எப்படி என்பது சஸ்பென்ஸ்- ஸ்டாலின்
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது என்று சஸ்பென்ஸ் வைத்து பேசியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
சென்னை: தமிழகத்தில் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேலத்தில் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அரசுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன் வைத்தார்.

ஆட்சிக்கு எதிராக 40 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆனாலும் கொல்லைப்புறமாக திமுக ஆட்சி அமைக்காது. மக்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைப்போம்.
திமுகவிடம் 89 எம்.எல்.ஏக்கள் எனும் பந்து இருக்கிறது. திமுகவிடம் இருக்கும் பந்தை என்ன செய்யப் போகிறோம் என்பது சஸ்பென்ஸ்.
ஜனநாயக முறையில் மக்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைப்போம். திமுக கூட்டணியின் 98 எம்.எல்.ஏக்கள் என்பது 117 ஆகாதா? 200 ஆகவும் மாறும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆட்சி மாற்றம் வரும் என்று கூறும் ஸ்டாலின் அதை எப்படி ஏற்படுத்துவோம் என்று கூறாமல் சஸ்பென்ஸ் ஆக வைத்து விட்டு சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications