மெட்டி போட்டு திருமணம்.. பர்ஸ்ட் நைட்.. போலீஸில் புகார்.. ஏமாற்றிய நிலானி: வீடியோவில் அம்பலமான உண்மை
சீரியல் நடிகை நிலானி உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரை திருமணம் செய்து அவருடன் உல்லாசமாக வாழ்ந்துவிட்டு அவர் மீதே புகார் அளித்திருப்பது அடுத்தடுத்து வெளியாகும் வீடியோவால் அம்பலமாகியுள்ளது.
Recommended Video

சென்னை: சீரியல் நடிகை நிலானி உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரை திருமணம் செய்து அவருடன் உல்லாசமாக வாழ்ந்துவிட்டு அவர் மீதே புகார் அளித்திருப்பது அடுத்தடுத்து வெளியாகும் வீடியோவால் அம்பலமாகியுள்ளது.
சீரியல் நடிகை நிலானி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது போலீஸ் யூனிபார்மில் போலீஸை விமர்சித்து வீடியோ வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே அவர் மீது வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவானார் நிலானி. பின்னர் குன்னூரில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

போலீஸ் விசாரணை
இந்நிலையில் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்யுமாறு டார்ச்சர் செய்வதாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் நிலானி. இதையடுத்து லலித்குமாரை அழைத்து விசாரித்தது போலீஸ்.

காதலன் தற்கொலை
காவல்நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பிய லலித்குமார் கேகேநகர் அருகே தீக்குளித்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காந்தி லலித்குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செப்டம்பர் 4அம் தேதி
தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி வற்புறுத்தியதாக புகார் அளித்த நிலானிக்கு காந்தி லலித்குமார் காலில் மெட்டி போட்டு திருமணம் செய்துள்ளார். செப்டம்பர் 4ஆம் தேதி இந்த திருமணம் நடந்துள்ளது.
|
நிலானி எடுத்த வீடியோ
அன்றைய நாளை தங்களின் திருமண நாளாக இருவரும் அறிவித்த வீடியோ உள்ளது. அதேபோல் காந்தி லலித் குமார் மெட்டி போட்டுவிடும் வீடியோவை நிலானியே தனது கையால் வீடியோ எடுத்துள்ளார்.

பெட்ரூம் போட்டோக்கள்
மெட்டி போட்ட கையோடு நிலானியின் கால்களை பற்றி முத்தமிடுகிறார். இதைத்தொடர்ந்து சினிமாவில் சென்சார் செய்யப்படும் காட்சிகளை போட்டோவாக எடுத்துள்ளனர்.

மெட்டியை காட்டும் போட்டோ
இதில் போர்வை ஒன்றை போர்த்தியபடி லலித்குமாரின் அருகில் அவரை அணைத்தப்படி கிடக்கும் நிலானி தனது மெட்டியை காண்பிக்கும் வகையில் காந்தியின் கால் மேல் தனது காலை வைத்து போட்டோவுக்கு போஸ்கொடுத்து போட்டோ எடுத்துள்ளார் நிலானி.

நிலானிக்கே வெளிச்சம்
இப்படி காந்தியும் நிலானியும் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். ஆனால் ஏன் திடீரென அவர் காந்தி திருமணத்திற்கு வற்புறுத்துவதாக கூறி போலீஸில் புகார் அளத்தார் என்பதும் காந்தியைவிட்டு ஏன் விலகினார் என்பதும் அவருக்கே வெளிச்சம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications