அதிமுக பிரமுகர் கார், வீடுகள் மீது தாக்குதல்.. நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் அதிமுக பிரமுகரை கொல்ல வந்த கும்பல் அவரது மகனை தாக்கி நகையை பறித்து சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை: நெல்லையில் அதிமுக பிரமுகரை கொல்ல வந்த கும்பல் அவரது மகனை தாக்கி நகையை பறித்து சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாரயணத்தை சேர்ந்தவர் நடராஜன். அதிமுக ஜெ பேரவை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் நெல்லை வண்ணார்பேட்டை ராமலிங்கம் தெருவில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் நடராஜன் மாலை அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது மூன்று மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவரது மகன் மனோஜ், கார் டிரைவர் சந்திரசேகரனிடம் நடராஜனை எங்கே என கேட்டுள்ளனர்.
அவர் வெளியே சென்றுள்ளார் என்று கூறவே ஆத்திரமடைந்த கும்பல் மனோஜை தாக்கி விட்டு அவர் கழுத்தில் கிடந்த 12 பவுன் செயினை பறித்து சென்றது. அவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த காரை அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் சேதப்படுத்தி விட்டு மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.
பின்னர் அங்கு வந்த நடராஜன் பாளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அவர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ''நான் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பல்வேறு இடங்களிலும் பொது கூட்டத்தில் அதிமுகவின் எதிர் கோஷ்டியை எதிர்த்து பேசி வந்தேன். இதனால் டிடிவி ஆதரவாளர்கள் தான் தாக்க வந்திருக்க வேண்டும். அவர் தன்னுடைய தொண்டர்களுக்கு நல்ல கருத்துகளை தெரிவிக்க வேண்டும்'' நடராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications